அரையாண்டு விடுமுறை நிறைவு: நாளை பள்ளிகள் திறப்பு.. தயார் நிலையில் மாணவர்கள்..!

Mahendran
புதன், 1 ஜனவரி 2025 (14:36 IST)
அரையாண்டு தேர்வு மற்றும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை இன்றுடன் நிறைவு பெறுவதை அடுத்து, நாளை முதல் பள்ளி திறக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு டிசம்பர் 23ஆம் தேதி அரையாண்டு தேர்வு முடிவடைந்து விடுமுறை தொடங்கியது. தற்போது அனைத்து மாணவர்களும் அரையாண்டு தேர்வு விடுமுறையில் இருந்தனர். இந்த விடுமுறை கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையுடன் இணைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் ஜனவரி 2ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதன் மூலம் ஒன்பது நாள் விடுமுறை இன்றுடன் முடிந்து, நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. மாணவ, மாணவிகள் தயார் நிலையில் உள்ளனர்.

மேலும், ஜனவரி 2ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளிலும் அடுத்த பருவ தேர்வுக்கான பாடங்கள் தொடங்கப்படும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments