2 மணி நேரம்தான் செய்முறை தேர்வு! – 10,11,12ம் வகுப்புகளுக்கு தொடக்கம்!

Webdunia
திங்கள், 25 ஏப்ரல் 2022 (09:21 IST)
தமிழ்நாட்டில் 10 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் செய்முறை தேர்வுகள் தொடங்கி நடைபெறுகின்றன.

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக ஆன்லைன் மூலமாக பொதுத்தேர்வு நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு நேரடியாக நடைபெற உள்ளது. இதற்காக பள்ளிக்கல்வித்துறை பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது.

10ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6ம் தேதியும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ம் தேதியும் பொதுத்தேர்வுகள் தொடங்கி நடைபெற உள்ளன. இந்த நிலையில் இன்று முதல் 10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வுகள் தொடங்கி நடைபெற உள்ளது.

மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பல கட்டங்களாக இந்த செய்முறை தேர்வு நடைபெற உள்ளது. வழக்கமாக 3 மணி நேரம் செய்முறை தேர்வுகள் நடைபெறும் நிலையில் இந்த முறை 2 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த வழிகாட்டு நெறிமுறைகளை தேர்வுத் துறை வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவிக்கு திடீரென பிறந்த குழந்தை.. குப்பை தொட்டியில் வீசியதால் பரபரப்பு..!

ஈரான் போரால் 1000 டன் இந்திய கன்டெய்னர்கள் முடக்கம்.. அழுகும் நிலையில் வேளாண் பொருட்கள்..!

ஈரான் எதிராக களமிறங்கும் இன்னொரு நாடு.. தூதர்களை திரும்ப பெற்றதால் பரபரப்பு..!

அமெரிக்கா ஏன் அனுமதி கொடுக்கணும்!.. மோடியை விளாசிய ஸ்டாலின்..

விஜய் ஒரு Sorry சொன்னா போதும்!. எல்லாம் முடிந்துவிடும்!.. சீமான் பேட்டி!..

அடுத்த கட்டுரையில்
Show comments