Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைன் கிளாஸுக்கு செல்போன் இல்லை – பள்ளி மாணவியின் விபரீத முடிவு!

Webdunia
புதன், 12 ஆகஸ்ட் 2020 (10:37 IST)
ஆன்லைன் கிளாஸ் வகுப்புகளைக் கவனிப்பதற்கு செல்போன் இல்லாத காரணத்தால் சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த ஒரு பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கொரோனா லாக்டவுன் காரணமாக பள்ளிகள் கடந்த 6 மாதத்துக்கும் மேலாக மூடப்பட்டுள்ள நிலையில் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் மாணவ மாணவிகளுக்கு செல்போன் தேவைப்படுகிறது. பல வீடுகளில் இன்னமும் செல்போன் கூட வாங்கிக் கொடுக்க முடியாத பெற்றோரின் பொருளாதார சூழல் உள்ளது.

இந்நிலையில் சென்னை ராமாவரத்தைச் சேர்ந்த ராமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி சின்னையா என்பவரின் மகள் யாமினி ( 17) தனது பெற்றோரிடம் செல்போன் கேட்டுள்ளார். அவர்கள் இன்னும் சில நாட்களில் வாங்கித் தருவதாக சொல்லியுள்ளனர். ஆனால் அதற்குள் அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரமாகப் பார்த்து தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவமானது அவரது பெற்றோர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற தற்கொலை தமிழகத்தில் நடப்பது இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடி வீட்டில் அவசர ஆலோசனை.. அமித்ஷா, ராஜ்நாத் சிங் விரைவு..!

பொன்முடி சர்ச்சை பேச்சு: தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க ஐகோர்ட் நீதிபதி உத்தரவு..!

பயங்கரவாதிகளை தப்ப விடமாட்டோம்; காஷ்மீரில் ஆய்வுக்கு பின் அமித்ஷா உறுதி..!

பெஹல்காம் சுற்றுலா சென்ற 35 தமிழர்கள்.. சென்னை திரும்புவது எப்போது?

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான மூன்று பயங்கரவாதிகள் ஸ்கெட்ச் வெளியீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments