வாக்கு எண்ணிக்கையை தள்ளிவைக்க சாத்தியமில்லை! – தமிழக தேர்தல் அதிகாரி

Webdunia
செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (13:25 IST)
கொரோனா காரணமாக வாக்கு எண்ணிக்கை தள்ளிவைக்கப்படலாம் என்ற செய்தியில் உண்மையில்லை என தமிழக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளதற்கு நடுவே 5 மாநில சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் இரண்டாம் அலை கொரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையம் சரியான கட்டுப்பாடுகளை மேற்கொள்ளாததே காரணம் என சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் கொரோனா காரணமாக வாக்குகளை எண்ணும் தேதி தள்ளிவைக்கப்படலாம் என தகவல்கள் வெளியானது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள தமிழக தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாகு “வாக்கு எண்ணிக்கையை தள்ளி வைப்பது குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசிக்கவில்லை. வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்படும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தலில் தி.மு.க. துடைத்தெறியப்படும்: முதல்வர் ஸ்டாலினுக்கு அமித் ஷா சவால்!

புதின் இந்திய வருகையால் டிரம்ப் ஆத்திரம்.. இந்திய அரிசுக்கு வரி விதிக்க திட்டமா?

2 நாளில் சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கும் மேல் சரிவு.. என்ன ஆச்சு இந்திய பங்குச்சந்தைக்கு?

புதுவை விஜய் கூட்டத்திற்கு துப்பாக்கியால் வந்த நபரால் பரபரப்பு.. என்ன நடந்தது?

10 நாட்கள் தங்கம் விலையில் மாற்றமே இல்லை.. எதிர்காலத்தில் ஏறுமா? இறங்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments