மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை: சதுரகிரி மலை ஏறுவதற்கு தடை.. பக்தர்கள் அதிருப்தி..!

Mahendran
வியாழன், 16 அக்டோபர் 2025 (17:29 IST)
ஸ்ரீவில்லிபுத்தூர்: மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் நீடிக்கும் கனமழையின் காரணமாக, சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்குப் பக்தர்கள் மலை ஏறுவதற்கு விதிக்கப்பட்ட தடையை வனத்துறை வரும் அக்டோபர் 21 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
 
ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்தின் சாப்டூர் வனச்சரகம் எல்லைக்குள் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது.
 
2015 ஆம் ஆண்டு சதுரகிரி பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு பிறகு, இங்கு அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம் போன்ற குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டு வந்தனர். சமீப காலமாக, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, கடந்த ஏப்ரல் மாதம் முதல் தினசரி காலை 6 மணி முதல் 10 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
 
தற்போது மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், சதுரகிரி மலையேறும் பாதையில் உள்ள நீரோடைகள் மற்றும் காட்டாறுகளில் நீர் வரத்து அபாயகரமாக அதிகரித்துள்ளது. மேலும், மலைப்பகுதியில் சாரல் மழையும் விடாமல் பெய்து வருகிறது.
 
பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சதுரகிரி மலையேறுவதற்கு அக்டோபர் 21 ஆம் தேதி வரை தடை விதிக்கப்படுவதாக வனத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலகளவில் சிறந்த வாடிக்கையாளர் சேவை! முதல் இடத்தை பிடித்த சென்னை மெட்ரோ!

பட்டாசு வெடிக்க இதையெல்லாம் பண்ணாதீங்க! தீபாவளிக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

தீபாவளி கொண்டாட்டம்; சென்னையிலிருந்து மொத்தமாக கிளம்பிய 18 லட்சம் மக்கள்!

24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு! தீபாவளிக்கு இருக்கு செம மழை! - எந்தெந்த மாவட்டங்களில்?

இந்து மதத்தை சேர்ந்த கல்லூரி பெண்கள் ஜிம்முக்கு செல்ல வேண்டாம்: பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments