Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாத்தான்குளம் வழக்கு: கைதான 3 பேருக்கு 15 நாட்கள் சிறை!

Webdunia
வியாழன், 2 ஜூலை 2020 (21:44 IST)
தமிழகம் முழுவது காவல் ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் புதிதாக தென்மண்டல ஐஜியாக பொறுப்பெற்றுள்ள முருகன் சாத்தான்குளம் வழக்கு குறித்து பேசியுள்ளார்.

சாத்தான்குளம் செல்போன் கடை உரிமையாளர் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ராஜ் ஆகியோரை போலீஸார் விசாரணைக்கு அழைத்து சென்ற நிலையில் அவர்கள் உயிரிழந்த சம்பவம் தேசிய அளவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தாமாக முன் வந்து விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை மாஜிஸ்திரேட் அறிக்கை மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கையை வைத்து உடனடி விசாரணையை மேற்கொள்ள சிபிசிஐடிக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் காவல் ஆணையர்கள் மாற்றப்பட்டுள்ளதால் தென்மண்டல ஐஜியாக முருகன் பதவியேற்றுள்ளார். பதவியேற்றதும் சாத்தான்குளம் சம்பவம் குறித்து பேசியுள்ள முருகன் “லாக்கப் டெத் சம்பவங்கள் தவிர்க்கப்பட வேண்டியது என்பதே காவல்துறையின் நிலைபாடு. சாத்தான்குளம் வழக்கில் சாட்சியல் அளித்துள்ள காவலர் ரேவதி மற்றும் அவர் குடும்பதிற்கு போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட போலீஸார் 48 மணிநேரம் சிறையில் இருந்தாலே அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள்” என்று சாத்தான்குளம் வழக்கு குறித்து தான் நேரில் சென்று விசாரிக்க இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில், சாத்தான் குளம் தந்தைம் மகன் மரண வழக்கில்  கைதான 3 காவல் ஆய்வாளர்களான ஸ்ரீதர், எஸ்.பாலகிருஷ்ணன். ரகு கணேஷ் ஆகிய மூவரையும்  15 நாட்கள் ( ஜூலை 15 வரை ) நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டி..! சகோதரிக்கு ஆதரவளிக்க வேண்டும்.! ராகுல் காந்தி..!!

முதல்வர் முக ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்: பெண் காவலர் அரிவாள் வெட்டு குறித்து ஈபிஎஸ்..!

முட்டைகளை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி விபத்து.. சாலையில் சிதறிய லட்சக்கணக்கான முட்டைகள்..!

ஜெயங்கொண்டம் அருகே குழந்தையை தண்ணீரில் அமுக்கிக் கொன்ற தாத்தா… மூட நம்பிக்கையால் நடந்த கொடூரம்!

பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments