Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாத்தான்குளம் வழக்கு: கைதான இரு போலிஸ் கைதிகளுக்கு கொரோனா!

Webdunia
செவ்வாய், 28 ஜூலை 2020 (14:53 IST)
சாத்தான்குளம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர்கள் முருகன், முத்துராஜா ஆகிய இருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
சாத்தான்குளம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 10 போலிஸ் கைதிகளும் மதுரை மத்திய சிறையில் உள்ள நிலையில் போலிஸ் கைதிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் காவலர்கள் முருகன், முத்துராஜா ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
இருவரும் அரசு கொரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனைக்கு அழைத்து செல்லபட்டு சிகிச்சை அளிக்கவுள்ளனர். ஏற்கனவே இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட சார்பு ஆய்வாளர் பால்துரைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளதோடு சாத்தான்குளம் கொலை வழக்கு விசாரணை குழுவில் இடம்பெற்றிருந்த 6 சிபிஐ அதிகாரிகளுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் வழக்கு தொடர்பாக சிபிஐ இன்று அறிக்கை தாக்கல் செய்யலாம் என ஏற்கனவே கூறியிருந்த நிலையில் அறிக்கை தாக்கல் செய்வது தாமதம் ஆகலாம் என தகவல் வெளியாகியது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments