Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழ் சினிமாவில் குரூப்பிசம் இருக்கு… நட்ராஜ் சர்ச்சை டிவீட்!

தமிழ் சினிமாவில் குரூப்பிசம் இருக்கு… நட்ராஜ் சர்ச்சை டிவீட்!
, செவ்வாய், 28 ஜூலை 2020 (12:00 IST)
தமிழ் மற்றும் இந்தி திரையுலகில் பிரபலமான ஒளிப்பதிவாளராக இருக்கும் நட்ராஜ் பகிர்ந்துள்ள டிவீட் ஒன்று சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

தமிழ் மற்றும் இந்தி ஆகிய இரு மொழி படங்களிலும் தொடர்ந்து பணியாற்றி வரும் ஒளிப்பதிவாளர் நட்ராஜ் தன் டிவிட்டர் பக்கத்தில் ’தமிழ் சினிமால நெபோட்டிசம் இருக்கா இல்லையான்னு தெரியல.. ஆனா குரூபிசம் இருக்கு... யாருக்கு என்ன கிடைக்கணுங்கிறத யாரோ நிர்ணயிக்கறாங்க... யாருங்க நீங்க????...’ என ஒரு டிவீட்டைப் போட்டுள்ளார். இது தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட்டில் சுஷாந்த் தற்கொலையை முன்னிட்டு நெப்போட்டிசம் பற்றி விவாதங்கள் எழுந்தன. இதில் கரன் ஜோஹர், மகேஷ் பட் மற்றும் சல்மான் கானின் சகோதரர்கள் ஆகியோர் குற்றம்சாட்டப்பட்டனர். இதுகுறித்து தற்போது ஆஸ்கர் வென்ற ரஹ்மான் மற்றும் ரசூல் பூக்குட்டி ஆகியோர் கூட தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நட்டியின் இந்த டிவீட் யாரைக் குறிக்கிறது என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனுஷ்: சமையல் கலைஞர் ஆக ஆசைப்பட்டவர் திரைக்கலைஞர் ஆன கதை