சசிக்கலாவை வரவேற்க வந்த கார்கள்; திடீரென தீப்பற்றி எரிந்ததால் அதிர்ச்சி!

Webdunia
திங்கள், 8 பிப்ரவரி 2021 (13:28 IST)
சசிக்கலா வருவதையொட்டி அவரை வரவேற்க சென்ற கார்களில் இரண்டு தீப்பற்றி எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா விடுதலையான நிலையில் இன்று தமிழகம் வந்துள்ளார். கிருஷ்ணகிரி வழியாக சென்னை வரும் அவருக்கு பல இடங்களில் கோலாகல வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவரை வரவேற்க பலர் காரில் சென்றும் வருகின்றனர்.

இந்நிலையில் கிருஷ்ணகிரி அருகே சசிக்கலாவை வரவேற்க சென்ற கார்களில் இரண்டில் திடீரென தீப்பற்றியது. வாகனத்தில் இருந்தவர்கள் பாதுகாப்பாய் வெளியேறிவிட்ட நிலையில் வாகனங்கள் பற்றி எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வாகனங்கள் தீப்பற்றியதற்கான காரணம் குறித்து போலீஸார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் ஒரு கோழை!.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.வி.சேகர்!...

இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்!. வாட்ஸ்அப்பை எச்சரித்த உச்ச நீதிமன்றம்!...

அமெரிக்காவுக்கு அதிக வரி செலுத்தும் நாடுகள் எது?... எவ்வளவு வரி!..

ஆனந்த் அம்பானி வாங்கியுள்ள தங்க கார்!.. எவ்வளவு கோடி தெரியுமா?!...

இந்தியா அப்படி எங்ககிட்ட எதுவும் சொல்லயே!.. டிரம்ப்பை கடுப்பேத்திய ரஷ்யா!...

அடுத்த கட்டுரையில்
Show comments