Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா புஷ்பா வீடு மீது தாக்குதல்!

Webdunia
திங்கள், 1 ஆகஸ்ட் 2016 (15:50 IST)
திமுக எம்.பி.திருச்சி சிவாவை டெல்லி விமான நிலையத்தில் கன்னத்தில் அறைந்த சசிகலா புஷ்பா விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.


 
 
இன்று மாநிலங்களவையில் பேசிய அவர் அதிமுக தலைமை தன்னை ராஜினாமா செய்ய வற்புறுத்தியதாகவும், தன்னை அடித்ததாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு அதிமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
இதனையடுத்து அதிமுக தலைமையை குற்றம்சாட்டி பல தகவல்களை கூறி பேட்டியளித்தார் சசிகல புஷ்பா. இந்நிலையில் நெல்லை அருகே உள்ள சசிகலா புஷ்பாவின் வீடு மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இது சசிகலா புஷ்பா கணவர் லிங்கேஷ்வரனின் பூர்வீக வீடாகும். முன்னதாக மாநில அரசால் தனக்கு ஆபத்து உள்ளதால் தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என அவர் மாநிலங்களவையில் பேசினார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments