Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொத்துக்குவிப்பு வழக்கை திறந்தவெளி நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும்: சசிகலா புதிய மனு!

சொத்துக்குவிப்பு வழக்கை திறந்தவெளி நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும்: சசிகலா புதிய மனு!

Webdunia
செவ்வாய், 22 ஆகஸ்ட் 2017 (11:25 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் தண்டனை உறுதி செய்யப்பட்ட சசிகலா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது தரப்பில் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க இன்று புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


 
 
சசிகலா சார்பில் ஏற்கனவே சீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு அந்த மனு மீதான விசாரணை இன்று வர உள்ளது. இந்நிலையில் சசிகலா சார்பில் இன்று புதிய மனு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் சொத்துக்குவிப்பு வழக்கை திறந்தவெளி நீதிமன்றத்தில் மீண்டும் விசாரிக்க சசிகலா கோரிக்கை வைத்துள்ளார்.
 
ஏற்கனவே சொத்துக்குவிப்பு வழக்கை 18 ஆண்டுகளுக்கு இழுத்தடித்த சசிகலா தரப்பு மீண்டும் விசாரிக்க கோரிக்கை வைத்திருப்பது தள்ளுபடியாக வாய்ப்பு உள்ளது. இந்த வழக்கில் அனைத்து மேல்முறையீடும் முடிந்துவிட்டதால் சசிகலா தரப்பு மீண்டும் திறந்தவெளி நீதிமன்றத்தில் விசாரிக்க கோரிக்கை வைத்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. வர்த்தகர்கள் மகிழ்ச்சி..!

ஈபிஎஸ் பெயரில் கேரள அரசு அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சி தகவல்..!

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments