Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி மருத்துவமனையில் கை அசைத்த சசிகலா!

Webdunia
வியாழன், 21 ஜனவரி 2021 (14:36 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த 4 ஆண்டுகளாக பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார். இந்நிலையில் அவர் வரும் 27 ஆம் தேதி தண்டனை முடிந்து விடுதலையாக இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவந்தன. 
 
இதனிடையே திடீரென நேற்று மாலை சசிகலாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனைக்கு  கொண்டு செல்லப்பட்டார். தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வரும் அவருக்கு கொரோனா தொற்று  இருக்குமோ என பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
 
அந்த சோதனையில் கொரோனா பாதிப்பில்லை என ரிசல்ட் வந்தது.  சிறையிலிருந்து விடுதலை ஆக ஒருவாரம் மட்டுமே இருக்கும் நிலையில் திடீரென அவர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
இந்த நிலையில் சற்றுமுன் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி மருத்துவமனையில் கை அசைத்த சசிகலாவின்  புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் சிடி ஸ்கேன் எடுக்க வேறு மருத்துவமனைக்கு சசிகலா மாற்றம் செய்யப்பட்டபோது எடுக்கப்பட்டது என தகவல்கள் கூறுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments