Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனிமொழியை எதிர்த்து போட்டியிட சொன்ன பாஜக.. சரத்குமார் சொன்ன பதில்..!

Mahendran
வியாழன், 14 மார்ச் 2024 (15:50 IST)
சமீபத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற அரசியல் கட்சியை பாஜகவுடன் சரத்குமார் இணைந்து நிலையில் அவர் இரண்டு தொகுதிகளை கேட்டதாக தெரிகிறது. 
 
ஒன்று நெல்லை மற்றும் இரண்டு விருதுநகர் ஆகிய தொகுதியை கேட்ட நிலையில் நெல்லை தொகுதி ஏற்கனவே நயினார் நாகேந்திரனுக்கு ஒதுக்கப்பட இருப்பதால் நீங்கள் பக்கத்து தொகுதியான தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுங்கள்ம் நீங்கள் கனிமொழியை எதிர்த்து போட்டியிட்டால் அகில இந்திய அளவில் பிரபலமாகி விடுவீர்கள் என்று பாஜக கூறியதாம். 
 
ஆனால் சரத்குமார் தூத்துக்குடியில் போட்டியிட்டால் கடும் போட்டி இருக்கும் என்பதால் தூத்துக்குடியில் போட்டியிட விரும்பவில்லை என்றும் அதற்கு பதிலாக விருதுநகர் மற்றும் வேறு ஏதாவது தொகுதியை கொடுங்கள் என்று சரத்குமார் கேட்டதாகவும், இதற்கு பாஜக தலைமை ஒப்புக்கொண்டதாகவும் தெரிகிறது. 
 
எனவே சரத்குமாருக்கு ஒதுக்கப்படும் இரண்டாவது தொகுதி எது என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்டோக்களுக்கு அரசு செயலி அமைக்கப்படும்.. அமைச்சர் சிவசங்கர் தகவல்..!

Go back Governor கோஷமிட்ட எம்.எல்.ஏ.க்கள்: உபி சட்டமன்றத்தில் பரபரப்பு..!

ஓபிஎஸ் ஒரு கொசு.. அவரை பற்றி பேசுவதற்கு இது நேரமில்லை: ஜெயகுமார்

இரு மகன்களுடன் சேர்ந்து மனைவியை அடித்தே கொன்ற கணவன்.. செல்போனில் பேசியதால் விபரீதம்..!

மலக்குடல் பாக்டீரியாக்கள் மிதக்கும் கும்பமேளா தண்ணீர்!?? குளிக்க தகுதியற்றது..! - மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments