Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூய்மை பணியாளரின் மகள் நகராட்சி ஆணையராக நியமனம் - கல்விதான் யாராலும் பறிக்க முடியாத சொத்து - முதல்வர் ஸ்டாலின்..!

Senthil Velan
திங்கள், 12 ஆகஸ்ட் 2024 (20:21 IST)
குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று தூய்மை பணியாளரின் மகள் நகராட்சி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், கல்விதான் யாராலும் பறிக்க முடியாத சொத்து என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த துர்கா குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று நகராட்சி ஆணையராக பதவியேற்க உள்ளார். என் தாத்தாவும், அப்பாவும் தூய்மைப்பணியாளர்கள், அந்த அடையாளத்தை மாற்ற வேண்டும் என நினைத்தேன்,இன்றிலிருந்து எங்க வாழ்க்கை மாறியுள்ளது என்று துர்கா கூறியுள்ளார்.
 
இந்நிலையில் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க ஸ்டாலின், நகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்கும் திருமிகு துர்கா அவர்களின் பேட்டியைக் கேட்டு அகமகிழ்ந்தேன் என குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ: GOAT TRAILER UPDATE..! நாளை முறையான அறிவிப்பு.! தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி.!!
 
கல்விதான் ஒரு தலைமுறையையே முன்னேற்றிடும் ஆற்றல் பெற்றது என்பதற்குத் திருமிகு துர்கா அவர்களே எடுத்துக்காட்டு என்றும் நான் மீண்டும் சொல்கிறேன். கல்விதான் யாராலும் பறிக்க முடியாத சொத்து என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments