Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்றாவது காதலுடன் மனைவி எஸ்கேப்; துரத்தி சென்று குத்திய இரண்டாவது கணவன்! – சேலத்தில் பரபரப்பு!

Webdunia
ஞாயிறு, 6 டிசம்பர் 2020 (12:34 IST)
சேலத்தில் தன்னை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட மனைவில் மூன்றாவதாக காதலன் ஒருவனுடன் தப்பி சென்றபோது கணவனே கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் சங்ககிரி ஒன்றியம் சாமியம்பாளையத்தை சேர்ந்தவர் அன்பரசு. இவர் கவுந்தப்பாடியை சேர்ந்த சுந்தரராஜன் என்பவரின் மனைவி பத்மாவுடன் நீண்ட காலமாக தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் 3 மாதங்களுக்கு முன்பு பத்மாவை அழைத்து வந்து இரண்டாவது முறையாக திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார் அன்பரசு.

இந்நிலையில் பத்மாவிற்கு அப்பகுதியை சேர்ந்த தமிழ் செல்வன் என்பவருக்கும் புதிதாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பத்மா அடிக்கடி தமிழ் செல்வனுடன் சேர்ந்து வெளியே சுற்றி வந்துள்ளார். இது தெரிந்த அன்பரசு அடிக்கடி பத்மாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் பத்மா தமிழ் செல்வனுடன் சென்று விட முடிவெடுத்ததாக தெரிகிறது. இந்நிலையில் தமிழ் செல்வனுடன் பத்மா பைக்கில் சென்ற போது ரகசியமாக பதுங்கி இருந்து வழிமறித்த அன்பரசு மிளகாய் பொடியை தமிழ் செல்வன் முகத்தில் தூவியுள்ளார். பிறகு பத்மாவை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பியுள்ளார். இதனால் காயமடைந்த பத்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் தலைமறைவான அன்பரசை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments