Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக எம் எல் ஏவின் மகன் கொரோனாவால் உயிரிழப்பு – அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

Webdunia
சனி, 17 அக்டோபர் 2020 (12:05 IST)
திமுக சைதாப்பேட்டை எம் எல் ஏ மா. சுப்பிரமணியத்தின் மகன் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.

கொரோனா காரணமாக பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இதில் அரசியல் பிரமுகர்களும் தப்பவில்லை. திமுக எம் எல் ஏ ஜெ அன்பழகன் மற்றும் அமமுக பொருளாளர் வெற்றிவேல் ஆகியோர் கொரோனாவால் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இப்போது சைதாப்பேட்டை எம் எல் ஏ மா. சுப்பிரமணியத்தின் இரண்டாவது மகன் அன்பழகன் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.

மா க சுப்பிரமணியத்துக்கு 2 வாரங்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு உறுதியானது. அவரது குடும்பத்தில் அவர் மனைவி மற்றும் இளைய மகன் அன்பழகனுக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து இருவரும் சிகிச்சை பெற்றனர். இதில் அன்பழகன் சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments