Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டார்ச்ச நீங்க எடுத்தா போதுமா? பேட்டரி வேண்டாமா? – கமலை கலாய்த்த எஸ்.வி.சேகர்!

Webdunia
சனி, 4 ஏப்ரல் 2020 (12:01 IST)
நாளை இரவு பிரதமர் டார்ச் அடிக்க சொன்னது குறித்து கமல்ஹாசன் பேசிய கருத்துக்கு பதில் அளித்து பதிவிட்டுள்ளார் பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர்.

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நாளை இரவு 9 மணிக்கு வீட்டில் உள்ள மின்விளக்குகளை அணைத்துவிட்டு டார்ச் லைட் அடிக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். பிரதமரின் இந்த அறிவிப்பு குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ”அத்தியாவசியமான அறிவிப்பு ஏதாவது சொல்வார் என பார்த்தால் நான் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே இப்போதுதான் அவர் வருகிறார்” என நக்கலாக பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் கமல்ஹாசனின் பதிவுக்கு பதிலடி கொடுக்க பதிவிட்ட பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர் ” சில சமயம் நம்ம படத்துல அதிகம் எதிர்பார்த்து ஏமாந்தது மாதிரி இல்ல இது. வெறும் டார்ச்லைட் கையில இருந்தா போதாது. அது பிரகாசமா எரிய பாட்டரி தேவை. அதுதான் நம் பிரதமர். இந்த 21 நாள் தேசத்திற்கே ஊரடங்கு. இதில் அரசியல் எதற்கு உங்கள் ஆலோசனைகளை பிரதமரிடமே தெரிவிக்கலாமே.”  என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments