Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரண்ட் பெட்டிக்குள் கை வைக்கிறார் கமல் - எஸ்.வி.சேகர் பேட்டி

Webdunia
திங்கள், 6 நவம்பர் 2017 (09:47 IST)
நடிகர் கமல்ஹாசன் ஒரு மூன்றாம்தர அரசியல்வாதி போல் நடந்துகொள்கிறார் என நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் ‘இந்து தீவிரவாதம் இல்லை என இனிமேல் கூற முடியாது’ என்ற கருத்தை தெரிவித்திருந்தார். இதற்கு பாஜவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், நடிகர் எஸ்.வி.சேகர் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இதுபற்றி கருத்து தெரிவித்த போது “ கமல்ஹாசன் ஒரு மூன்றாம் தர அரசியல்வாதி போல் நடந்து கொள்கிறார். இந்து தீவிரவாதம் என்ற ஒன்று இல்லை. இது அவரின் கற்பனை. ஒருவேளை ஹாசன் என பெயர் வைத்திருப்பதாலோ என்னவோ அவருக்கு இந்துக்களுக்கு எதிரான மனப்பான்மை வந்து விட்டது என நினைக்கிறேன். 
 
கேரளாவுடன் ஒப்பிட்டு பேசும் அளவுக்கு தமிழகம் ஒன்றும் தாழ்ந்து போய்விடவில்லை. கமலுக்கு கேரளாதான் பிடிக்கும் என்றால் அவர் அங்கேயே சென்று வாழட்டும்.  இந்துமதம் பற்றி தொடர்ந்து விமர்சிப்பதன் மூலம் அவர் கரண்ட் பெட்டிக்குள் கை வைக்கிறார். அதன் விளைவு விபரீதமாக இருக்கும்” எனக் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மத்திய அரசின் நடவடிக்கை.. இந்தியாவுக்கு சிகிச்சைக்காக வந்த பாகிஸ்தானியர்கள் அதிர்ச்சி..!

பாகிஸ்தானில் திடீர் ஏவுகணை சோதனை.. இந்தியாவை பயமுறுத்தவா? எல்லையில் பதட்டம்..!

குடிக்கக் கூட தண்ணி கிடைக்காது! அடி மடியில் கைவைத்த மோடி! அதிர்ச்சியில் பாகிஸ்தான்!

இனி பாகிஸ்தான் அரசின் எக்ஸ் பக்கத்தை பார்க்க முடியாது: முடக்கியது மத்திய அரசு..!

பயங்கரவாதத்தை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்! - காஷ்மீர் தாக்குதல் குறித்து சத்குரு பதிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments