Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாடாய் படுத்தும் முரசொலி நிலம்: பாமக, பாஜக டோட்டலி அப்செட்?

Webdunia
செவ்வாய், 3 டிசம்பர் 2019 (11:07 IST)
முரசொலி விவகாரம் குறித்து தவறான குற்றச்சாட்டை முன்வைத்ததாக திமுக சார்பில் பாமக் நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாஜக நிர்வாகி சீனிவாசன் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 
 
தனுஷ் நடித்த அசுரன் திரைப்படத்தை பார்த்த திமுக தலைவர் முக ஸ்டாலின், பஞ்சமி நிலம் குறித்து அசுரன் திரைப்படம் பேசியுள்ளது. இந்த திரைப்பட குழுவினருக்கு எனது பாராட்டுக்கள் என டிவிட்டரில் பதிவிட்டார். இதை தொடர்ந்து அவரது கருத்துக்கு எதிர் கருத்தாக பாமக நிறுவனர் ராமதாஸ் முரசொலி கட்டிடமே பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டதுதான் என கூறினார். 
 
அதற்கு பதிலளிக்கும் விதமாக முக ஸ்டாலின், முரசொலி பத்திரத்தின் பட்டாவை பதிவிட்டு, முரசொலி கட்டிடம் பஞ்சமி நிலம் அல்ல என கூறினார். இதையடுத்து, ராமதாஸ் முரசொலி கட்டிடத்தின் மூலப்பத்திரத்தை காட்டுமாறு ஸ்டாலினை குறிப்பிட்டு கூறினார். 
இதனிடையே உள்ளேபுகுந்த தமிழக பாஜக செயலாளர் ஆர் ஸ்ரீனிவாசன் டெல்லியில் உள்ள தேசிய பட்டியல் இனத்தவர் ஆணையத்தில் முரசொலி நிலம் குறித்து புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை  மேற்கொள்ளப்பட்டது. 
 
 இந்த விசாரணைக்கு திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி ஒத்துழைப்பு கொடுத்தார். ஆனால், புகார் அளித்த சீனிவாசன் விசாரணைக்கு வரவில்லை. இதன் பின்னர் முரசொலி நிலம் தொடர்பாக அவதூறு பரப்பியதற்கு பாமக நிறுவனர் ராமதாசும், பாஜக தேசியச் செயலாளர் சீனிவாசனும் திமுகவிடம் மன்னிப்பு கோர வேண்டும் என ஆர்.எஸ்.பாரதி அறிவித்திருந்தார்.
 
ஆனால், இதை எதையும் இவர்கள் கண்டுக்கொள்ளாத நிலையில் தற்போது ஆர்.எஸ்.பாரதி, சென்னை ழூம்பூர் நீதிமன்றத்தில் ராமதாஸ் மற்றும் சீனிவாசம் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.  இந்த வழக்கு வரும் 5 ஆம் தேதி விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments