Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உஷாவின் குடும்பத்தினருக்கு ரூ.7 லட்சம் நிவாரண நிதி - முதல்வர் அறிவிப்பு

Webdunia
வியாழன், 8 மார்ச் 2018 (15:53 IST)
நேற்றிரவு திருச்சியில் காவல்துறை ஆய்வாளர் ஒருவரின் மோசமான செயலால் மூன்று மாத கர்ப்பிணி உஷா பரிதாபமாக உயிரிழந்தார். உஷாவின் கணவர் ராஜா பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் உஷாவின் மரணத்திற்கு காரணமான காவல்துறை ஆய்வாளர் காமராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டு அவர் மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

மகளிர் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் கர்ப்பிணி உஷாவின் மரணம் தமிழகத்தையே உலுக்கிவிட்டது. கதறியழும் உஷாவின் கணவரை தேற்ற முடியாமல் அவரது உறவினர்கள் திகைத்து போயுள்ளனர்.

இந்த நிலையில் திருச்சியில் உயிரிழந்த இளம்பெண் உஷாவின் குடும்பத்தினருக்கு ரூ.7 லட்சம் நிவாரண நிதி வழங்குவதாக முதல்வர் பழனிசாமி சற்றுமுன் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments