Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுப்பொலிவு பெறுகிறது அம்மா உணவகங்கள்.. ரூ. 5 கோடி ஒதுக்கிய சென்னை மாநகராட்சி..!

Mahendran
வெள்ளி, 14 ஜூன் 2024 (10:23 IST)
சென்னையில் உள்ள அம்மா உணவகங்களை புதுப்பொலிவு செய்ய 5 கோடி ரூபாய் சென்னை மாநகராட்சி ஒதுக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி அம்மா உணவகம் திமுக ஆட்சியிலும் நடந்து கொண்டிருந்தாலும் சில அதிருப்திகள் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னையில் உள்ள அம்மா உணவகங்களை புதுப்பொலிவு செய்ய சென்னை மாநகராட்சி ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ரூபாய் 5 கோடியில் சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களையும் கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது.

அம்மா உணவகங்களின் கட்டிடங்களை சீரமைப்பது, பழுதான பிரிட்ஜ், கிரைண்டர், மிக்ஸி ஆகியவற்றை மாற்றுவது ஆகிவற்றை செய்ய மண்டல அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிகிறது.

மேலும் அதிக வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ருசியான புதிய வகை உணவுகளையும் அம்மா உணவகத்தில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments