Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: பாஜகவின் 2 பிரபலங்கள் ஆஜராக சிபிசிஐடி சம்மன்..!

Siva
செவ்வாய், 21 மே 2024 (07:25 IST)
தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பாஜகவின் 2 பிரபலங்கள் ஆஜராக வேண்டும் என சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் இன்று தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராக சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது.

இன்று காலை 10 மணிக்கு எழும்பூர் சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் இருவரும் ஆஜராக உள்ளனர். அவர்களிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏப்.6ம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்தில் தேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனையில் ரூ.4 கோடி ரொக்கம் சிக்கியது.  இந்த விவகாரத்தில் பிடிபட்ட மூன்று நபர்கள் திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் அவர்களுக்காக பணம் கொண்டு செல்வதாக வாக்குமூலம் அளித்த நிலையில் நயினார் நாகேந்திரன் உள்பட அவரது தரப்பினர் சிலர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியானது.

மேலும் தேர்தல் முடிவுக்கு முன்பே இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி முடித்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களவையை தெறிக்கவிட்ட ராகுல்.! அனல் பறக்கும் விவாதம்..! 2 முறை குறுக்கிட்ட பிரதமர் மோடி.!!

ஆக்கும் சக்தி கடவுள் என்றால் காக்கும் சக்தி மருத்துவர்கள் தான்: அன்புமணியின் மருத்துவர் தின வாழ்த்து..!

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டணம் இரு மடங்கு உயர்வு: ஆஸ்திரேலியா அதிர்ச்சி அறிவிப்பு..!

சாலையில் அசால்ட்டாக வலம் வந்த 8 அடி நீள முதலை; வாகன ஓட்டிகள் அதிர்ச்சி..!

மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் வழங்காமல் இறுமாப்புடன் தட்டிக் கழிப்பதா.? திமுக அரசுக்கு சீமான் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments