Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பத்திரிகையாளர் மன்றத்தில் அரிசி - மளிகை பொருட்கள்- அமைச்சர் உதயநிதி

Webdunia
சனி, 23 டிசம்பர் 2023 (21:00 IST)
சென்னையில் பத்திரிகையாளர் சகோதரர்கள் 400 பேருக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் அரிசி - மளிகை பொருட்கள் ஆகியவற்றை மழைக்கால நிவாரணமாக இன்று வழங்கியுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

சென்னை, திருவள்ளுவர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் பாதிப்பு  மற்றும் அதிகனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் சென்னை முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு   நிவாரண உதவிகள் வழங்கி வருகிறது.

இந்த நிலையில், பத்திரிகையாளர் சகோதரர்கள் 400 பேருக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் அரிசி - மளிகை பொருட்கள் ஆகியவற்றை மழைக்கால நிவாரணமாக இன்று வழங்கியுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

‘’புயலோ - மழையோ - பெருந்தொற்றோ எந்தப் பேரிடர் என்றாலும் முதலில் களத்தில் நிற்பவர்கள் பத்திரிகை - ஊடகத்துறை நண்பர்கள். மிக்ஜாம் - கன மழை வெள்ள நேரத்திலும் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றினார்கள். அத்தகைய பத்திரிகையாளர் சகோதரர்கள் 400 பேருக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் அரிசி - மளிகை பொருட்கள் ஆகியவற்றை மழைக்கால நிவாரணமாக இன்று வழங்கினோம்.

பத்திரிகையாளர் நலனில் கழக அரசு என்றும் துணை நிற்கும் என்று உரையாற்றினோம்’’என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

கனமழை எதிரொலி. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில்?

தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.. இந்த அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments