Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மெரினாவில் குடியரசு தினக் கொண்டாட்டம் – கொடியேற்றினார் ஆளுநர்

Webdunia
சனி, 26 ஜனவரி 2019 (12:18 IST)
70-வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை மெரினா காமராஜர் சாலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக் கொடியை ஏற்றி குடியரசுதின விழாவை சிறப்பித்தார்.

இந்திய நாட்டின் 70 ஆவது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டு அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் குடியரசு தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தலைமை செயலாளர் கிரிஜா வைத்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டு ஆளுநர் பண்வாரிலால் புரோஹித்தை முப்படை வீரர்கள் அணிவகுப்புடன் வரவேற்றனர்.

ஆளுநர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து குடியரசு தினவிழாவை ஆரம்பித்து வைத்தார். அப்போது விமானப்படையின் ஹெலிகாப்டர்கள் வானில் பறந்து பூக்களை தூவிச் சென்றன.

கொடியேற்றத்திற்குப் பின்பு முப்படை வீரர்கள், தமிழக காவல் துறையினர் உள்ளிட்டோரின் அணிவகுப்பு நடைபெற்றது.அதன் பின்பு வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குடியரசு தினவிழாவை முன்னிட்டு மெரினா கடற்கரை மற்றும் அதை சுற்றியுள்ள சாலைகள் அனைத்துக்கும் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments