நீலகிரிக்கு ரெட் அலர்ட்! 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! - தமிழகத்தில் மையம் கொண்ட மழை!

Prasanth Karthick
செவ்வாய், 16 ஜூலை 2024 (15:08 IST)

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே ஆங்காங்கே லேசான மழை தொடர்ந்து வந்த நிலையில் தற்போது அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த சில வாரங்களாகவே நல்ல மழை பெய்து வருகின்றன. இந்நிலையில் தற்போது காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிகனமழை முதல் கனமழை வரை பெய்யக்கூடிய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று நீலகிரி மாவட்டத்தில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட பகுதிகளில் ஓரிரு பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், கன்னியாக்குமரி மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 20ம் தேதி வரை தமிழகம், மற்றும் புதுச்சேரியின் பல பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments