Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலம் போட்டு கைதான பெண் ஒருவருக்கு பாகிஸ்தானுடன் தொடர்பா? அதிர்ச்சி தகவல்

Webdunia
வியாழன், 2 ஜனவரி 2020 (10:14 IST)
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சமீபத்தில் சென்னையில் கோலம் போட்டதால் கைது செய்யப்பட்ட பெண்களில் ஒருவருக்கு பாகிஸ்தான் அமைப்பு ஒன்றுடன் தொடர்பு இருபப்தாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னை பெசன்ட் நகரில் கடந்த சில நாட்களுக்கு முன் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோலம் போட்டு போராட்டம் நடத்தியதாக ஒருசில கல்லூரி மாணவிகள் உள்பட சிலர் கைது செய்யப்பட்டனர்.
 
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்த காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், ’ கோலம் போட்டதால் யாரும் கைது செய்யப்படவில்லை. அடுத்தவர்களின் வீட்டு வாசலில் கோலம் போட்டு தகராறு செய்ததால்தான் அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவித்து இது தொடர்பாக வீடியோ ஆதாரம் ஒன்றையும் வெளியிட்டார்.
 
மேலும் கைது செய்யப்பட்ட பெண்களில் ஒருவரான காயத்திரி கந்தாதே என்றும், இவர் பாகிஸ்தான் பத்திரிகையாளர் அமைப்பில் உறுப்பினராக இருப்பதாகவும், அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தும் அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வசதி படைத்த குடும்ப பெண்களை காதல் வலையில் வீழ்த்தி மோசடி! - தொழிலதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்து சிக்கிய கோவை வாலிபர்

வேலைக்கு ஆள் எடுக்கும் HRஐயே பணிநீக்கம் செய்த IBM.. இனி எல்லாமே AI தான்..!

பொறுமை கடலினும் பெரிது: ராஜ்ய சபா எம்பி சீட் குறித்து பிரேமலதா கருத்து..!

500 ரூபாய் நோட்டை திரும்ப பெற வேண்டும்: அப்ப தான் கறுப்பு பணம் அழியும்: சந்திரபாபு நாயுடு..!

வகுப்புக்கு செல்லவில்லை என்றால் விசா ரத்து: இந்திய மாணவர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments