Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராம்குமாரின் காதல் லீலைகள்: பரபரப்பு தகவல்கள்

ராம்குமாரின் காதல் லீலைகள்: பரபரப்பு தகவல்கள்
, புதன், 6 ஜூலை 2016 (13:46 IST)
சுவாதி, ராம்குமார் இந்த இரு பெயர்களும் தற்போது ஊடகங்களில் வலம் வரும் முக்கியமான பெயராகவிட்டது. நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம் பெண் சுவாதி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இவரை நெல்லையை சேர்ந்த ராம்குமார் தான் கொலை செய்தார் என காவல் துறையினர் கைது செய்தனர்.


 
 
இதனையடுத்து ராம்குமார் குறித்து தினம் தினம் பல தகவல்கள் வெளிவந்தவாறு உள்ளன. ராம்குமார் அமைதியான பையன், யாரிடமும் அதிகமாக பேசமாட்டான், பெரிய அளவில் நண்பர்கள் வட்டாரம் கிடையாது, ராம்குமாரா கொலையை செய்தான் என நம்ப முடியவில்லை என்ற ஊர்காரர்களின் கருத்து என பல செய்திகள் ஊடகங்களில் வெளிவருகின்றன.
 
இந்நிலையில் ராம்குமார் ஏற்கனவே 2 பெண்களை காதலித்ததாகவும் பேசப்படுகிறது. இது குறித்து அவரது சொந்த ஊரான மீனாட்சிபுரத்தில் உள்ளவர்களிடம் விசாரித்த போது ராம்குமாரின் முன்னாள் காதல் விவகாரங்கள் குறித்து தெரியவந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.
 
ராம்குமார் கல்லூரியில் படிக்கும் போது கேரளாவை சேர்ந்த ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்ததாகவும், இதனால் கல்லூரி நிர்வாகம் அவரை எச்சரித்ததாக கூறப்பட்டது. இதனால் தான் அவர் படிப்பில் கோட்டைவிட்டதாக பேசப்படுகிறது.
 
மேலும் சில வருடங்களுக்கு முன்னர் ஊரில் ஒரு பெண்ணுக்கும் ராம்குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாகவும், அந்த விவகாரம் ஊர் பஞ்சாயத்து வரை சென்றது என கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவில் நிர்வாணக் குளியல்கள் நடக்கும் 5 கடற்கரைகள்