Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழையால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!

Webdunia
திங்கள், 30 அக்டோபர் 2023 (07:44 IST)
கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என தமிழகத்தில் உள்ள ஒரே ஒரு மாவட்டத்தின் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.  
 
தமிழகத்தில் சென்னை உள்பட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.  வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் இன்னும் ஒரு சில நாட்களுக்கு நல்ல மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று இரவு விடிய விடிய மழை பெய்ததை அடுத்து அந்த மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என அந்த மாவட்டத்தின் ஆட்சி தலைவர் விஷ்ணு சந்திரன் அறிவித்துள்ளார்.  இதனை அடுத்து ராமநாதபுரம் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் ஒரு சில மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருவதால் விடுமுறை குறித்த அறிவிப்பு இன்னும் சில நிமிடங்களில் வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தென் மாவட்டங்களான ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரேபரேலியா - வயநாடா.? எந்த தொகுதி.? ராகுல் காந்தி சொன்ன பதில்..!

40க்கு 40 போல், 200க்கும் மேல் இலக்கு.. தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!

வாரணாசியில் மோடியை எளிதில் தோற்கடித்திருக்கலாம்.. மிஸ் செய்துவிட்டோம்: ராகுல் காந்தி

டெல்லியில் ரஜினிகாந்த் நடத்திய திரைமறைவு அரசியல்.. வெளிவராத உண்மை..!

60அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் விழுந்த நபரை உயிருடன் மீட்ட -தீயணைப்பு வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments