Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அழுகுன பழத்தை குடுத்த கருணாநிதி ஏமாத்திட்டார்! – ராமதாஸ் ட்வீட்!

Webdunia
வியாழன், 7 ஜனவரி 2021 (11:51 IST)
வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி கேட்டு வரும் பாமக நிறுவனர் ராமதாஸ், முன்னாள் முதல்வர் கருணாநிதி தன்னை ஏமாற்றி விட்டதாக கூறியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாமகவினர் வன்னியர் பிரிவினருக்கு 20% இடஒதுக்கீடு கோரி வரும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இடஒதுக்கீடு கோரி சென்னையில் பாமகவினர் கடந்த மாதம் நடத்திய போராட்டம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ட்விட்டரில் இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக பதிவிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் ” 21 உயிர்களைக் கொடுத்து போராடிய வன்னியர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டிருக்க வேண்டிய 20% இட ஒதுக்கீட்டை கலைஞர் சூழ்ச்சி செய்து கூடுதலாக 107 சாதிகளுக்கு அள்ளிக்கொடுத்தார். நல்ல கனி என்று அழுகிய கனியைக் கொடுத்து ஏமாற்றினார்!” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

அடுத்த கட்டுரையில்
Show comments