Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வனச்சரகர் பணியிடங்கள் காலியாக உள்ளன… ராமதாஸ் கோரிக்கை!

Webdunia
சனி, 26 ஜூன் 2021 (15:40 IST)

பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழகத்தில் காலியாக உள்ள வனச்சரகர் பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார்.

இது சம்மந்தமாக பாமக நிறுவனர் ராமதாஸ் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ‘தமிழகத்தில் வனச்சரகர் பணியிடங்கள் மிக அதிக எண்ணிக்கையில் காலியாக உள்ள நிலையில், வனக்காப்பாளர்களுக்கு வனச்சரகர் பதவி உயர்வு வழங்குவது தாமதப்படுத்தப்படுகிறது. பதவி உயர்வு பட்டியல் தயாரிக்கப்பட்டு, 10 மாதங்களாகியும் நடைமுறைப்படுத்தப்படவில்லை! வனக்காப்பாளர்கள் பலருக்கு 16 ஆண்டுகளில் கிடைத்திருக்க வேண்டிய இரண்டாவது பதவி உயர்வு 21 ஆண்டுகளாகியும் இன்னும் வழங்கப்படாதது சமூக அநீதி. எனவேவனச்சரகர் பதவி உயர்வை இனியும் தாமதப்படுத்தாமல் உடனடியாக வழங்க அரசு முன்வர வேண்டும்" என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சிங்கப்பூரில் பரவி வரும் புதிய வகை கொரோனாவால் பாதிப்பா? பொது சுகாதாரத்துறை விளக்கம்..!

ரேவண்ணா பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு, சிறப்பு புலனாய்வு குழு கடிதம்

மைசூருவில் நடிகை குத்திக் கொலை..! கணவருக்கு போலீசார் வலைவீச்சு..!!

இன்னும் சிலமணி நேரத்தில் 20 மாவட்டங்களில் கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

தமிழகத்தின் தண்ணீர் தேவை அண்டை மாநிலங்களை சார்ந்து உள்ளது- எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments