Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினிக்காக மக்கள் சேவை கட்சியை பதிவு செய்தது யார்?

Webdunia
செவ்வாய், 15 டிசம்பர் 2020 (13:07 IST)
மக்கள் சேவை கட்சியை பதிவு செய்தது தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. 
 
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக அறிவித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கட்சி பெயர், சின்னம் உள்ளிட்டவை குறித்தும், கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவது குறித்து ரஜினிகாந்த் ஆலோசனை மேற்கொண்டார்.
 
அதற்கு பிறகு ரஜினி தொடங்கும் புதிய கட்சியின் பெயர் “மக்கள் சேவை கட்சி” என்று பெயரிடப்பட்டுள்ளதாக தற்போது அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு சின்னமாக பாபா திரைப்படத்தில் ரஜினி காட்டு இரட்டை விரல் சின்னம் கோரப்பட்டதாகவும் ஆனால் அதை மறுத்துள்ள தேர்தல் ஆணையம் அதற்கு பதிலாக ஆட்டோவை சின்னமாக வழங்கியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
இந்நிலையில் ரஜினி துவங்க இருக்கும் கட்சியின் பெயர் “மக்கள் சேவை கட்சி” என கூறப்பட்டு வந்த நிலையில் மக்கள் சேவை கட்சியை பதிவு செய்தது தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளரின் சென்னை வீட்டு முகவரியில் மக்கள் சேவை கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எனக்கு பிரதமர் ஆசை இல்லை.. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்..!

மின் கட்டணம் செலுத்தாததால் இருளில் மூழ்கிய ராமேஸ்வரம் பாம்பன் பாலம்.. சுற்றுலா பயணிகள் அதிருப்தி

மீண்டும் உச்சம் சென்றது பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

முல்லைப் பெரியாரில் புதிய அணை கட்டுவதா.? கேரளாவுக்கு அன்புமணி கண்டனம்..!!

இனிமேல் மோடி தான் பிரதமர் என எப்படி சொல்வார் பிரசாந்த் கிஷோர்? சரவணன் அண்ணாதுரை

அடுத்த கட்டுரையில்
Show comments