Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினிக்கு மட்டும் ஏன் இந்த மாற்றம்? அறிக்கை கேட்கும் தலைமை தேர்தல் அதிகாரி!

Webdunia
வெள்ளி, 19 ஏப்ரல் 2019 (17:08 IST)
நேற்று தமிழகத்தில் 38 மக்களவை தொகுதியிலும் 18 சட்டமன்ற தொகுதியிலும் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்றது. சென்னையில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பல திரையுலக பிரமுகர்கள் வாக்களித்தனர்
 
இந்த நிலையில் நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது வாக்கை சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் பதிவு செய்தார். அப்போது அவரை புகைப்படம் எடுக்க ரசிகர்களும், பத்திரிகையாளர்களும் முண்டியடித்தனர். அந்த சமயத்தில்  ரஜினிக்கு தேர்தல் அதிகாரி இடது கை விரலில் மை வைப்பதற்கு பதிலாக வலது கை விரலில் மை வைத்துவிட்டார். இது பெரும் சர்ச்சையானது
 
இதுகுறித்து பேட்டியளித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, 'ரஜினி ஓட்டு போட வரும்போது பத்திரிகையாளர்கள் உள்பட பெருங்கூட்டம் கூடியதால் அவசரத்தில் தேர்தல் அதிகாரி இடது கைவிரலுக்கு பதில் வலது கைவிரலில் மை வைத்திருக்கலாம். இருப்பினும் இதுகுறித்து விளக்க அறிக்கை கேட்கப்படும். அதேபோல் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோர் சிறப்பு விதியின்படி வாக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டது குறித்தும் அறிக்கை கேட்கப்படும் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி உயர்வு.. ஆனால் விலையில் மாற்றமில்லை..!

ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சீமான் - அண்ணாமலை.. ஒருவரை ஒருவர் புகழ்ந்ததால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments