எந்த கொம்பன் வந்தாலும்... ரஜினியை மறைமுகமாக சாடிய செல்லூரார்?

Webdunia
வெள்ளி, 4 டிசம்பர் 2020 (15:57 IST)
ஆண்ணாட்டு காலம் மக்களுக்காக உழைக்கும் கட்சி அதிமுக என அமைச்சர் செல்லூர் ராஜூ பெருமிதம். 
 
நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் டிசம்பர் 31 ஆம் தேதி புதிய கட்சி துவங்கும் தேதி அறிவிக்கப்படும் என்றும் ஜனவரியில் கட்சி துவங்கப்படும் என்றும் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும், வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில் ஊழலற்ற, ஜாதி மதச்சார்ப்ற்ற அரசியல் ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம் என்றும் பதிவிட்டிருந்தார்.    
 
இந்நிலையில் இது குறித்து பல அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள் வாழ்த்துக்களையும் விமர்சனங்களையும் முன்வைத்த நிலையில் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ, ஆண்ணாட்டு காலம் மக்களுக்காக உழைக்கும் கட்சி அதிமுக. 
 
எத்தனை பேர் கட்சி துவங்கினாலும், எந்த கொம்பன் வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது என மறைமுகமாக ரஜினியை சாடினார். ஆனால், தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த கையோடு வாய்ப்பு இருந்தால் ரஜினியுடன் அதிமுக கூட்டணி வைக்கும் என தெரிவித்தார்.  
 
இது குறித்து இன்று அமைச்சர் ஜெயகுமாரை செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது ஓ.பன்னீர் செல்வம் பேசியது அதிமுகவின் கருத்து அல்ல அது அவரது சொந்த கருத்து என பதிலளித்தார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூருவில் தனியாக வாழும் ஒரு பெண்ணின் மாத செலவு ₹1 லட்சம்! சமூக வலைத்தளத்தில் புலம்பல்..!

லியோனல் மெஸ்ஸி நிகழ்வு குளறுபடி: மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா; பலிகடா ஆக்கப்பட்டாரா?

30 ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ்ந்த இந்திய பெண்: க்ரீன் கார்டு இண்டர்வியூ போது கைது..!

நாளைய பாமக ஆர்ப்பாட்டத்தில் தவெகவும் பங்கேற்காது? அதிமுகவும் பங்கேற்பு இல்லை..

மோடி காரை ஓட்டிய ஜோர்டான் நாட்டு இளவரசர்.. புகைப்படங்களை பகிருந்த பிரதமர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments