Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Siva
வெள்ளி, 20 செப்டம்பர் 2024 (20:17 IST)
இன்று தமிழகத்தின் 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், இரவு நேரத்தில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
 
அந்த வகையில், இன்று இரவு 10 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம் ஆகிய 11 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 
 
ஆனால், அதே நேரத்தில் பகல் நேரத்தில் அதிக வெப்பம் இருக்கும் என்றும், குறிப்பாக இயல்பை விட இரண்டு முதல் நான்கு டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலின் தமிழக முதல்வர் ஆனால் முதல் கையெழுத்து பெண்களை தாலியை அறுக்காத அளவுக்கு நான் பார்த்துக்கொள்வேன் என சொன்னார்கள் அது என்ன ஆச்சு- அதிமுக அமைப்பு செயலாளர் சுதா.கே.பரமசிவன் கேள்வி!

திமுகவினர் நடத்திய பொதுக்குழு உறுப்பினர் கூட்டத்தில் பிரியாணிக்காக அடி உதை!

மாமன்னன் உதயநிதி ஸ்டாலினுக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவி கொடுப்பார் - அமைச்சர் செஞ்சி மஸ்தான்!

2026 தேர்தலில் MIC இல்லை..! வேறு சின்னத்தில் போட்டி - சீமான்.!!

நான் தோல்வியடைந்தால் இஸ்ரேல் பூமியில் இருந்து அழிக்கப்படும்.! டிரம்ப் பேச்சால் பரபரப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments