Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழை: இந்திய வானிலை ஆய்வு மையம்..!

Webdunia
செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (07:59 IST)
இன்னும் மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
இந்திய வானிலை ஆய்வு மையம் தினந்தோறும் நாடு முழுவதும் மழை பெய்யும் இடங்கள் குறித்து அறிவிப்பை வெளியிட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தமிழகத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் இன்னும் மூன்று மணி நேரத்தில் மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது. 
 
நீலகிரி ஈரோடு புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்னும் மூன்று மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெரும்பாலும் வறட்சியான வானிலை நிலவு வந்தாலும் ஒரு சில மாவட்டங்களில் மட்டும் மழை பெய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தமிழகத்தில் சென்னை உள்பட பல மாவட்டங்களில் வெயில் கொளுத்தி வருகிறது என்பதும் ஒரு சில மாவட்டங்களில் 100 டிகிரி தாண்டி வெப்பம் அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கோடை மழை பெய்தால் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கவை.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் மருந்து வியாபாரம்.. மெடிக்கல் ஷாப் ஓனர்கள் யாரும் எதிர்க்கவில்லை.. ஏன் தெரியுமா?

விஜய்யின் கனவை கலைத்த அமித்ஷாவின் சென்னை விசிட். இனி யாருடன் கூட்டணி?

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்! பெரும் பரபரப்பு..!

நாம் தமிழர் கட்சிக்கும், துரைமுருகன் சேனலுக்கும் எந்த தொடர்பும் இல்லை! – சீமான் பரபரப்பு அறிக்கை!

நாசாவில் பணிபுரிந்த இந்திய வம்சாவளி பெண் பணிநீக்கம்.. டிரம்ப் உத்தரவு ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments