Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Mahendran
சனி, 25 மே 2024 (08:19 IST)
தற்போது கோடைகாலமாக இருந்தாலும் குறிப்பாக அக்னி நட்சத்திர காலமாக இருந்தாலும் தமிழகத்தின் பல பகுதிகளில் ஆங்காங்கே மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
வங்க கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாற இருக்கும் நிலையில் தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று சற்றுமுன் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 
 
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல் மற்றும் ஈரோடு ஆகிய பகுதிகளில் காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
கோடை காலத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதும் குறிப்பாக வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தோன்றி இருப்பதும் தட்பவெப்ப நிலையை முற்றிலுமாக மாற்றி விட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தந்தை ரேவண்ணா, மகன் பிரஜ்வல் ரேவண்ணாவை அடுத்து இன்னொரு மகன் சூரஜ் ரேவண்ணா கைது!

கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: ஹோட்டல் உரிமையாளர், மீன் வியாபாரி கைது..!

கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் மேலும் ஒரு கைது.. சென்னை எம்ஜிஆர் நகரில் பதுங்கி இருந்தாரா?

நீட் முறைகேடு வழக்கு: சிபிஐ வசம் ஒப்படைத்தது மத்திய அரசு

அடுத்த கட்டுரையில்
Show comments