Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழை: வானிலை அறிக்கை..!

Webdunia
திங்கள், 27 மார்ச் 2023 (07:44 IST)
அடுத்த மூன்று மணி நேரத்தில் நீலகிரி உள்பட ஆறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடை வெயில் கொளுத்திக் கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் தமிழகத்தில் உள்ள சில பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக சென்னை உள்பட ஒரு சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் நீலகிரி உள்பட ஆறு மாவட்டங்களில் இன்னும் மூன்று மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 6 மாவட்டங்களில் இன்னும் மூன்று மணி நேரத்தில் மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. 
 
சென்னையை பொருத்தவரை வானம் ஒரு சில இடங்களில் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் சில இடங்களில் மட்டும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

இந்தியா - பாகிஸ்தான் போரில் 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.. டிரம்ப் மீண்டும் சர்ச்சை..!

கொழுந்தனுடன் கள்ளக்காதல்.. கணவனை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments