அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழை: வானிலை அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 18 டிசம்பர் 2022 (10:44 IST)
இன்னும் 3 மணிநேரத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மற்றும் வடமேற்கு பருவமழை, கீழ் அடுக்கு சுழற்சி உள்பட பல்வேறு காரணங்களால் கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தில் நல்ல மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
 
குறிப்பாக தமிழகத்தில் மாண்டஸ் புயல் கரையை கடந்த போது கனமழை பெய்தது என்பதும் இதனால் சென்னை உள்பட தமிழகத்தின் பல நீர்நிலைகள் நிரம்பி உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்னும் 3 மணி நேரத்தில் சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, நீலகிரி ஆகிய 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
ஏற்கனவே இன்று காலை சென்னையில் உள்ள ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெஸ்ஸியுடன் ஒரு போட்டோ எடுக்க ரூ.10 லட்சம் கட்டணமா? பொங்கியெழும் நெட்டிசன்கள்.!

கரூர் நெரிசல் விவகாரம்: உயர் நீதிமன்ற விசாரணை நடைமுறையில் தவறு.. உச்சநீதிமன்றம்

ஈரோட்டில் தவெக பொதுக்கூட்டம் நடக்குமா?!.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!....

டெல்லிக்கு செல்லும் முன் பழனிச்சாமியுடன் சந்திப்பு.. நயினர் நாகேந்திரன் மூவ் என்ன?..

சசி தரூரின் தொடர் 'ஆப்சென்ட்': ராகுல் காந்தி தலைமையிலான கூட்டத்தை மீண்டும் தவிர்த்தார்

அடுத்த கட்டுரையில்
Show comments