Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் நள்ளிரவில் கொட்டி தீர்த்த மழை: அதிகபட்சமாக மழைப் பதிவு எங்கே?

Siva
செவ்வாய், 24 செப்டம்பர் 2024 (07:27 IST)
சென்னையின் முக்கிய பகுதிகளில் நேற்று நள்ளிரவு மிதமான மழை முதல் கனமழை வரை பெய்த நிலையில், எந்தெந்த பகுதியில் எவ்வளவு மழை பெய்துள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

சென்னை உள்பட 14 மாவட்டங்களில் நேற்று இரவு மழை பெய்யும் என்று ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், சென்னையின் முக்கிய பகுதிகளில் நேற்று மழை பெய்ததால், சென்னை நகரமே குளிர்ச்சியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களாக அதிக வெப்பம் காரணமாக சென்னை மக்கள் பரிதாபகரமான நிலையில் இருந்ததால், நேற்றைய மழை மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்பதும், இதனால் தட்பவெப்ப நிலை சீரானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சென்னையில் நேற்று பல இடங்களில் நல்ல மழை பெய்து உள்ள நிலையில், மணலையில் 14.3 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதேபோல், அம்பத்தூர் பகுதியில் 8.2 சென்டிமீட்டர், மதுரவாயல் பகுதியில் 8.7 சென்டிமீட்டர், திருநின்றவூர் பகுதியில் 8 சென்டிமீட்டர், வளசரவாக்கம் பகுதியில் 6.5 சென்டிமீட்டர், மற்றும் திருவேற்காடு பகுதியில் 6 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

நேற்றைப் போலவே, இன்னும் சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments