Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்னும் சில மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழை: வானிலை அறிவிப்பு

Rain
, ஞாயிறு, 4 டிசம்பர் 2022 (14:54 IST)
இன்னும் ஒரு சில மணி நேரங்களில் தமிழகத்திலுள்ள 16 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. 
 
வடகிழக்கு பருவக்காற்று மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் இன்னும் ஒரு சில மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் அதாவது மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவை விட்டு வெளியேறு: ஜே.என்.யூ பல்கலையில் கம்யூனிஸ்டுகள் குறித்த வாசகத்தால் பரபரப்பு