Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் சில மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

Webdunia
ஞாயிறு, 15 அக்டோபர் 2023 (16:00 IST)
தமிழகத்தில் உள்ள 14 மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என தெரிவித்துள்ளது.

கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், விருதுநகர்,  நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, பெரம்பலூர்,  அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் ஆகிய 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாளை மற்றும் நாளை மறுநாளும் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

நீட் தேர்வு முறைகேடு.. 4 மாணவர்கள் கைது.. 9 மாணவர்களுக்கு சம்மன்..!

ஆப்பிள் மேல் அப்கிரேட்… மதுரையில் உலாவரும் வேன்!

2 வயது பச்சிளம் குழந்தை சர்க்கரை நோய்க்கு பலி.. தேனியில் அதிர்ச்சி சம்பவம்..!

தமிழகத்தில் ஜூன் 19 வரை மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

பாஜக தோல்விக்கு மாநில தலைவர் தான் காரணம்.. அரைநிர்வாண போராட்டம் நடத்தியவர் டிஸ்மிஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments