Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்று காலை 10 மணி வரை 16 மாவட்டங்களில் மழை: வானிலை எச்சரிக்கை..!

Rain
, ஞாயிறு, 15 அக்டோபர் 2023 (08:20 IST)
கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது என்பதும் இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளிலும் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

மேலும் அடுத்த வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கும் நிலையில் தமிழகத்தில் இனி மழை காலம் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழகத்தில் 16 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 16  மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
தெரிவித்துள்ளது.

 எனவே மேற்கண்ட 16 மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் விடிய விடிய கொட்டிய மழை! குளிர்ச்சியான தட்பவெப்பத்தால் மக்கள் மகிழ்ச்சி..!