Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்னும் சில மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

இன்னும் சில மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!
, ஞாயிறு, 15 அக்டோபர் 2023 (16:00 IST)
தமிழகத்தில் உள்ள 14 மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என தெரிவித்துள்ளது.

கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், விருதுநகர்,  நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, பெரம்பலூர்,  அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் ஆகிய 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாளை மற்றும் நாளை மறுநாளும் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெய் ஸ்ரீராம் இந்தியர்களின் நாடி நரம்புகளில் உள்ள மந்திரம்: உதயநிதிக்கு பதிலடி கொடுத்த பாஜக..!