Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாம்பரத்தில் பராமரிப்பு பணி.. மாற்றம் மற்றும் ரத்து செய்யப்பட்ட ரயில்களின் முழு விவரங்கள்..!

Siva
வியாழன், 8 ஆகஸ்ட் 2024 (11:33 IST)
தாம்பரத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் மாற்றம் மற்றும் ரத்து செய்யப்பட்ட ரயில்களின் முழு விவரங்கள் இதோ:
 
1. நெல்லையிலிருந்து வரும் 16-ம் தேதி காலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.50 மணிக்கு சென்னை எழும்பூர் வரும் வந்தே பாரத் ரெயில் ரத்து 
 
2. செங்கோட்டையிலிருந்து வரும் 15, 16 ஆகிய தேதிகளில் மாலை 6.20 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் பொதிகை அதிவிரைவு ரெயில் (12662) செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் நிறுத்தப்படும். மறுமார்க்கமாக, சென்னை எழும்பூரில் இருந்து வரும் 16, 17 ஆகிய தேதிகளில் இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டை செல்லும் பொதிகை அதிவிரைவு ரெயில் , அதற்கு மாற்றாக செங்கல்பட்டிலிருந்து இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டை செல்லும்.
 
3.  நெல்லையிலிருந்து வரும் 15, 16 ஆகிய தேதிகளில் இரவு 8.05 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் அதிவிரைவு ரெயில் செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் நிறுத்தப்படும். மறுமார்க்கமாக, சென்னை எழும்பூரில் இருந்து வரும் 16, 17 ஆகிய தேதிகளில் இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் அதிவிரைவு ரெயில், அதற்கு மாற்றாக செங்கல்பட்டிலிருந்து 9.10 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும்.
 
4.  கன்னியாகுமரியிலிருந்து வரும் 15-ம் தேதி மாலை 5.50 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலானது செங்கல்பட்டிலேயே நிறுத்தப்படும். 
மறுமார்க்கமாக, சென்னை எழும்பூரில் இருந்து வரும் 16, 17 ஆகிய தேதிகளில் மாலை 5.20 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில், அதற்கு மாற்றாக செங்கல்பட்டிலிருந்து மாலை 6.20 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி செல்லும்.
 
5. கன்னியாகுமரியிலிருந்து வரும் 14-ம் தேதி மாலை 6 15 மணிக்கு புறப்பட்டு டெல்லி ஹசரத் நிஜாமுதின் செல்லும் திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரெயில் விழுப்புரம், வேலூர், காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் ஆகிய மாற்றுப்பாதை வழியாக டெல்லி ஹசரத் நிஜாமுதின் செல்லும்.
 
6.  மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து திருச்சி வரும் அதிவிரைவு ரெயில் வரும் 15-ம் தேதி பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாற்றுப்பாதை வழியாக திருச்சி செல்லும்.
 
7. சென்னை எழும்பூரில் இருந்து இன்று முதல் வரும் 17-ம் தேதி வரை காரைக்கால் செல்லும் எக்ஸ்பிரஸ் இரவு 9 மணிக்கு பதிலாக இரவு 10.25 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments