Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலை 10 மணி வரை 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

Webdunia
வெள்ளி, 24 நவம்பர் 2023 (07:33 IST)
சென்னை உள்பட  10 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இருப்பினும் நேற்று மழை ஓரளவு குறைந்தது என்பதும் சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை இல்லை என்பதால் இன்று கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி கல்லூரிகள் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று காலை 10 மணி வரை 10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவள்ளூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்பதால் மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் 121 பேர் உயிரிழந்த விவகாரம்.. 2 பெண்கள் உட்பட 6 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments