Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழையால் பெருக்கெடுத்த வெள்ளம்: அந்தரத்தில் தொங்கும் தூத்துக்குடி தண்டவாளம்..!

Webdunia
திங்கள், 18 டிசம்பர் 2023 (13:01 IST)
தூத்துக்குடி மாவட்டம் தாதன் குளத்தில் கனமழையால் பெருக்கெடுத்த வெள்ளத்தில்  ரயில் தண்டவாளத்தின் அடித்தளம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் தண்டவாளத்தில் சில பகுதிகள் அந்தரத்தில் உள்ளது.

திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் ரயில்கள் இப்பாதையில் வழக்கமாக செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.  ஏற்கனவே திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதேபோல் வரலாறு காணாத மழையால் நெல்லை அருகே கங்கை கொண்டான் - தாழையூத்து இடையிலான ரயில் தண்டவாளம் அடித்து செல்லப்பட்டது.

இந்த நிலையில் வரலாறு காணாத கனமழை காரணமாக 4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை வழங்கியுள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பது, அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் உள்ளிட்டவை குறித்து முதலமைச்சர் உத்தரவுகள் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments