Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடலூர் பேருந்து நிலையக் கடைகளில் சோதனை… சிக்கியது என்ன?

கடலூர் பேருந்து நிலையக் கடைகளில் சோதனை… சிக்கியது என்ன?
Webdunia
சனி, 6 அக்டோபர் 2018 (16:39 IST)
கடலூர்  மாவட்டப் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியுள்ளனர்.

கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தலைமையில் அதிகாரிகள் இன்று கடலூர் மாவட்டப்பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள், குளிர்பான நிலையங்கள், ஹோட்டல்கள் மற்றும் பேக்கரிகள் போன்றவற்றில் திடீரென சோதனை நடத்தப்பட்டது. 50க்கும் மேற்பட்ட கடைகளில் அவர்கள் இந்த சோதனையை நடத்தினர்.

அப்போது சில கடைகளில் இருந்து தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பயன்பாட்டு காலம் முடிந்த மற்றும் அறிவிக்கப்படாத பொருட்கள் அழுகும் தருவாயில் இருந்த பழங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து அழித்தனர்.

கடை உரிமையாளர்களை ஆரோக்யமான பொருட்களை மட்டுமே விற்கவேண்டும் என எச்சரித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்தான் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இதே போன்ற சோதனையில் 200 கிலோ குட்கா பொருட்கள் சிக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments