Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியின் உலகில் உண்மைக்கு இடமில்லை.. அவை குறிப்பில் இருந்து நீக்கம் குறித்து ராகுல் கருத்து..!

Mahendran
செவ்வாய், 2 ஜூலை 2024 (12:12 IST)
நேற்று பாராளுமன்றத்தின் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசிய சில கருத்துக்கள் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் மோடியின் உலகில் உண்மைக்கு இடம் இல்லை என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்திருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 
 
நான் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதால் உண்மை மாறிவிடாது என்றும் ராகுல் காந்தி இன்று தெரிவித்துள்ளார். அவரது கருத்துக்கு காங்கிரஸ் கட்சியை மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
 
 நேற்று ராகுல் காந்தி பேசியபோது சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அந்த வரிகளை அவை குறிப்பில் இருந்து நீக்க சபாநாயகர் உத்தரவிட்டிருந்தார்.
 
இந்து மதம் குறித்து சர்ச்சுக்குரிய வகையில் பேசியது, அதானி அம்பானி குறித்த விமர்சனம், நீட் தேர்வு ந மற்றும் அக்னிபாத் திட்டம் குறித்து ராகுல் காந்தி பேசியது ஆகியவை அவை குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் இன்று அவை குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட கருத்துக்கு ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments