Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியின் காவலனாக மாறும் ராகவா லாரன்ஸ் : விரைவில் அரசியல் அறிவிப்பு

Webdunia
புதன், 3 ஜனவரி 2018 (11:37 IST)
நடிகர் ரஜினிகாந்த் தொடங்கும் அரசியல் கட்சியில் நடிகர் ராகவா லாரன்ஸ் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
நடிகராக இருந்தாலும் சமூக சேவையில் ஆர்வம் கொண்டவர் ராகவா லாரன்ஸ். ஆதரவற்ற மற்றும் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுத்து வருகிறார். மேலும், நடிகர் ரஜினியின் மீது திவிர அன்பும் பற்றும் கொண்டவர். கடந்த வருடம் ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்ற போது கூட மாணவர்களுடன் அவர் கலந்து கொண்டார். 
 
அந்நிலையில், சமீபத்தில் தான் அரசியலுக்கு வரப்போவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்த போது அதை ஆனந்தமாக வரவேற்றார். 
 
இந்நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய லாரன்ஸ், ரஜினியின் தீவிர தொண்டனாக, காவலனாக இருப்பேன் எனக் கூறினார். வருகிற 4ம் தேதி, ஆவடியில் தனது தாய்க்காக கட்டிய கோவிலில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்க இருப்பதாக அவர் அறிவித்துள்ளார். 
 
எனவே, அன்று அவர் தனது அரசியல் அறிவிப்பை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

நீதிபதி சுவாமிநாதன் மீது புகார்..! நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்திற்கு கொளத்தூர் மணி கடிதம்..!

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம்..!!

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக.! இபிஎஸ் வலியுறுத்தல்..!!

அடுத்த 5 நாட்களுக்கு, வெப்பநிலை உயரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்த விவகாரம்..! தாமாக முன்வந்து விசாரிக்கும் குஜராத் நீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments