Webdunia - Bharat's app for daily news and videos

Install App

R.B.V.S. மணியனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்!- நீதிமன்றம் உத்தரவு

Webdunia
வியாழன், 14 செப்டம்பர் 2023 (12:30 IST)
அம்பேத்கர், திருவள்ளுவரை இழிவுபடுத்திப் பேசியதாக ஆர்.பி.வி.எஸ்.மணியன் கைது செய்யப்பட்ட  நிலையில் அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்தில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வி.எச்.பி முன்னாள் மாநில துணைத்தலைவர் ஆர்.பி.வி.எஸ் மணியன், அம்பேத்கர், திருவள்ளுவர் உள்ளிட்ட தலைவர்களை இழிவாக பேசியிருந்தார்.

இதுகுறித்த வீடியோக்கள் சமூகவலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இன்று காலை சென்னை, தி நகரில் வைத்து  தனிப்படை போலீஸார் ஆர்.பி.வி.எஸ். மணியனை கைது செய்தனர். இதையடுத்து,  நீதிமன்றத்தில் அவரை போலீஸார் ஆஜர்படுத்திய நிலையில், அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மணியனின் உடல் நிலையக் கருத்தில் கொண்டு, தனியார் மருத்துவமனையில்  சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும் என்று மணியன் தரப்பு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தக் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments